Tuesday, 31 January 2017

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்


                                              வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வளாண்மை ஆகும்.
இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வ கையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.
கம்போஸ்ட் உரம்: பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.
தென்னை நார் கம்போஸ்ட் உரம்: தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
தொழு உரம்: இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று  கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
பிண்ணாக்கு உரம்: ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
பசுந்தாள் உரம்: தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி,நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழை களைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாகவும், மக்குச் சத்தாகவும் பயன் ஆகி, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.
மண்புழு உரம்: ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இதுதவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.

Monday, 30 January 2017

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு


                                                  


1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் 20 சதமும், மலைப்பகுதிகளில் 60 சதமும் காடுகள் உயரவேண்டுமென 1952ல் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வழிமுறைகளும் வரையறுக்கப்பட்டன. ஆனால் 55 ஆண்டுகளுக்குப் பின்னரும் காடுகளின் பங்கு 22 சதம்தான் உள்ளது. காடுகளை அழிப்பதால் கரியமில வாயு வளிமண்டலத்தில் அதிக அளவு சேர்கிறது. இது பல்வேறு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
       இதன் விளைவுகள்
  • அதிக மழை அல்லது வறட்சியால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும்.
  • குளிர் பிரதேசங்களில் பயிர்களின் வளர்ச்சிப் பருவம் அதிகரிக்கின்றது.
  • பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • அதிக வெப்பம் காரணமாக மண்ணில் அங்ககப் பொருட்களின் சிதைவு துரிதப்பட்டு இதன் அளவு குறைய வாய்ப்புள்ளது.
  • கரியமில வாயு அதிகரிப்பதால் உற்பத்தித் திறன் அதிகரித்து பயிர்கள் அதிக அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் மண்வளம் குறையலாம்.
  • பூமி வெப்பமடைவதால் கொசுவின் வாழ்நாள் மற்றும் இனவிருத்தியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மலேரியா பரவுகின்றது.
  • பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு உகந்த நிலை ஏற்படுதல் விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன.
  • வளிமண்டலத்தின் ஓசோன் படலம் சிதைவதால் தோல் புற்றுநோய்கள் அதிகம் ஏற்படும்.
  • அதிக வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகும் நீரினால் கடல்மட்டம் அதிகரிக்கிறது. இது தொடர்ந்தால் மாலத்தீவும், வங்கதேசமும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கடலோரப் பகுதிகளில் உப்புநீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக மாறும்.
விளைவுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

  • பெட்ரோலிய எரிபொருட்கள் உபயோகிப்பதன் அளவைக் குறைக்க வேண்டும்.
  • இயற்கைச் சக்தியைத் திறம்பட உபயோகித்துக் கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைக்கலாம்.
  • காடுகள் அழிவதை முழுவதுமாகத் தடுக்க வேண்டும்.
  • இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்கவும், நிலக்கரி எரித்தலைத் தடை செய்யவும் குறைந்த அளவு முன்னேற்றமடைந்த நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • வளர்ச்சியடைந்த நாடுகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத இரசாயனப் பொருட்களைப் பற்றிய தொழில்நுட்பங்களைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

Wednesday, 25 January 2017

காடுகளின் பயன்கள்

காடுகளின் பயன்கள்




ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது. நம் நாட்டிலுள்ள தார், சஹாரா போன்ற பாலைவனங்கள் காடுகள் அழிந்ததால் ஏற்பட்டவைஎன்று கருதப்படுகின்றது. காடுகள் பொதுவாக இரண்டுவிதப் பணிகளைச் செய்து வருகின்றன. நமக்குத் தேவையான பல அத்தியாவசியமான பொருட்களைக் கொடுத்து வருகின்றன. நாம் ஆரோக்கியமான வாழ நமது சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாத்து வருகின்றன.
காடுகள் தரும் பொருட்கள்
உபயோகப்படுத்தப்படும் எரிபொருள் சக்தி பலவற்றில் நகர்ப்புறத்தில் 50 சதமும், கிராமப்புறத்தில் 70 சதமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விறகில் பெரும்பகுதி விறகு காடுகளிலிருந்தே வருகிறது.
நம் நாட்டிலுள்ள சுமார் 4 கோடி ஆதிவாசிகளில் பாதிப்பேர் தங்கள் உணவுக்காக காடுகளையே நம்பியுள்ளனர். இலுப்பை போன்ற சுமார் 100 வகை மரங்கள் இவர்களது உணவுத் தேவையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பூர்த்தி செய்து வருகின்றன.
நமது நாட்டிலுள்ள கால்நடைகளில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கு விலங்குகள் தீவனத்திற்குக் காடுகளையே முழுவதும் நம்பியுள்ளன.
காகிதம், ரப்பர், தீக்குச்சி, விளையாட்டுக் கருவிகள், பொம்மைகள் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.
     தொழிற்சாலைகள்      ஏற்ற மரங்கள்
  காகிதம்   மூங்கில், தைலமரம், குடைவேல்
  ரேயான்   தைலமரம்
  பட்டை மரங்கள்   வாட்டில் மரம்
  மரப்பொம்மைகள்  மஞ்சக்கடம்பு, செஞ்சந்தனம்
  தீக்குச்சி  அயிலை, முள் இலவு
பஞ்சு (இலவம் மரம்), வாசனை எண்ணெய்கள் (சந்தன மரம்), தைல எண்ணெய், சோப்பு தயாரிக்க உதவும் எண்ணெய்கள் (வேம்பு, புங்கம் மற்றும் இலுப்பை), தோல்பதனிட உதவும் டானின், கோந்து, பீடி இலைகள் போன்ற பல உபயோகமான பொருட்களையும் காடுகள் தருகின்றன.

Monday, 23 January 2017

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் 

இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.

இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
  1.   பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
  2.   சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
  3.   பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
  4.   பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
  5.   மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)

  பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
  1.   சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  2.   நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  3.   நல்ல பயிர் மேலாண்மை
  4.   பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
  5.   பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
  6.   இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்

இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.

ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.

Monday, 9 January 2017

நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் பறவைகள்



விவசாயம்

                         

  நன்மை செய்யும் பூச்சிகள் 

      மற்றும் பறவைகள


இயற்கை வழ வேளாண்மை வழி முறைகளில் முக்கியமானது பூச்சிகள் கட்டுப்பாடுஇதற்கு தற்போது பூச்சிவிரட்டி (மூலிகைகள்) தயாரிப்பு மற்றும் உயிரியல் பூச்சிகட்டுப்பாடுமுறைகள் அறியப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.  இயல்பாகவே பூச்சி இனங்களில் ஒரு இனத்தை மற்றொரு இனம் சாப்பிடுவது இயல்பானது.அவ்வாறு விபரங்களை அறியும் போது நாம் அறிபவை பாம்புகள், தவளை, ஓணான், அரணை,சிலந்திகள், நட்டுவாக்கிளி எனப்படும் பூரான், பொறி வண்டுகள், குளவி இனங்கள், தயிர்கடாய்பூச்சிகள், தேள், ஒரு சில பறவை இனங்கள் இவைகளை குறிப்பிடலாம்.  மேலும் இதுபோன்ற வழிமுறைகள் அதிகமாகவே உள்ளன.  இவற்றை நமது பயிர் வகைகளுக்கு ஏற்றவாறு அறிந்து செயல்படுதல் மிகவும் நல்லது.

இதற்கு இவ்வாறு இடயற்கை வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பண்ணைகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுதல் மிகவும் அவசியம்.இவற்றை தவிர்த்து இரசாயண வழிமுறைகளை கடைபிடிக்ம் போது அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அறிதல் மிகவும் அவசியம்.இந்த பகுதியில் சில புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் ஒரு துவக்கம் மட்டுமே.
மேலும் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம்பறவைகளை கவர்வதற்கு “T” வடிவ கட்டைகளை வயல் வெளிகளில் பயிரின் உயரத்திற்கு ஏற்றவாறுபயிருக்கு மேல் 2 அடி உயரம் உள்ளவாறு அமைத்ததல் பறவைகள் அமர்ந்து பூச்சி, புழுக்கள் உள்ள இடத்தை அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.குளவி இனங்கள் குடி இருப்பதற்கு சட்டிகளை கவிழ்த்து குச்சிகளில் மாட்டி வயல்களில் நடுவே வைத்தல்.சிலந்தி வகைகள் தங்குவதற்கு வைக்கோல் நிரப்பிய பொம்மைகளை நிறுத்திவைத்தல்.தவளை, பல்லிகள், அரணை, ஓணான்கள் போன்றவை தங்குவதற்கு வயல் ஓரங்களில் கற்களால் மறைவிடங்கள் ஏற்படுத்துதல்.பொரி வண்டுகள், பூரான் வகைகள் போன்றவை வாழ்வதற்காக பண்ணையின் குறிப்பிட்ட பகுதிகளில் சறுககளை பரப்பிவிட்டு மூடாக்கு இடுதல், புதர் செடிகளை வளர்த்து வைத்தல்போன்றவை உயிர்வேலி அமைத்தலும் இதில் அடங்கும்

Thursday, 5 January 2017

எறும்புகள் பற்றிய சில அபூர்வ தகவல்கள்

எறும்புகள் பற்றிய சில அபூர்வ தகவல்கள்


நம்மை விட அளவில் மிகச்சிறியவையான (கிட்டத்தட்ட 10000 மடங்கு சிறியவை) எறும்புகளைப்பற்றி இன்று பார்ப்போம்.


பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களில் எண்ணிக்கைக்கு சமனானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன! இதுவொன்றே எறும்புகள்
லேசுப்பட்டவை இல்லை என்பதற்கு சான்று.

எறும்புகள் பற்றிய மேலும் சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்…

* எறும்புகள் டைனோசர்களின் காலத்தில்
இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் வருடங்கள் ஆகின்றன.

* 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றன.

* எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன!

* எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம் அவை : egg, larva, pupa, adult.

* சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை உயிர்வாழும். ( பிரிட்டானியா ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.)

* எறும்புகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

* எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும்!

* எறும்புகளில் அதிகாரம் உள்ள எறும்பு ராணி எறும்பாகும்.

* எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய எறும்புகளுக்ககவும்!

* எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன.

* எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது! கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை colony(காலனி) என்பார்கள். ( 2002 ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான எரும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் காலனி கண்டறியப்பட்டது. (இது இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.)

* சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியன. அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.

* சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை.

* வட அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார் 5 பில்லியன் பெறுமதியான உடமைகள் சேதமாகின்றன.

* எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியன. மனிதர்களும் எறும்புகளும் மட்டும் தான் விவசாயம் செய்கின்றோம். ஆனால் மனிதன் விவசாயம் செய்வதற்கு முதலிலிருந்தே எறும்புகள் விவசாயம் செய்துள்ளன.

Wednesday, 4 January 2017

பறவைகள் (ஏவ்ஸ் வகுப்பை சேர்ந்தவை)

பறவைகள் (ஏவ்ஸ் வகுப்பை சேர்ந்தவை) முதுகெலும்பு உயிரிகள் சிறகுகள், அலகுகள் கொண்டவை. பற்கள் அற்றவை. கடினமான ஓடு கொண்ட முட்டைகளை இடுபவை. நான்கு அறைகள் கொண்ட இதயம் கொண்டவை. எடைக்குறைவான ஆனால், வலிமையான அகச்சட்டகம் கொண்டவை. அவற்றின் முன்கைகளே இறக்கைகளாக மாறியுள்ளன. பெரும்பான்மையான பறவைகள் பறக்க கூடியவை, பெங்குவின் போன்ற சில பறக்காதவை.பெங்குவின் போன்றவை வாத்து குடும்பத்தைச் சேர்ந்தவை, அவை நீந்த பழக்கப்பட்டவை. பறவைகள் , தங்களுடைய இறக்கைகளைப் பயன்படுத்தி பறக்கின்றன. பொதுவாகப் பறவைகளின் உடல் சிறகு (இறகு)களினால் மூடப்பட்டிருக்கும். இறக்கைகளும், வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் இறக்கைகளை விரித்து பறக்கின்றன. கோழி மற்றும் மயில் போன்றவை அதிக உயரமோ அல்லது அதிக தூரமோ பறப்பதில்லை. கழுகு மிக மிக அதிக உயரம் பறக்கக்கூடிய பறவையாகும். ஆனாலும் சிறகு இல்லாமல் பறக்கக்கூடிய உயிருள்ள ஒரு பறவை நம் நாட்களிலும் உண்டு. அது எந்தப் பறவை தெரியுமா? அதுதான் வௌவால். இதனுடலில் சிறகு இல்லை. பதிலாக மெல்லிய மயிர் உரோமமே உண்டு. ஆனால் செட்டைகள் உண்டு. சிறகு இல்லை. செட்டைகளை சிறகுகளின் கூட்டமாகிய சிறக்கைகளை என்றும். இறகுகளின் கூட்டமாகிய இறக்கைகளை என்றும்.பெரியவர்கள்கூட தவறாக விளங்கியே வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் உங்கள் வீட்டிலோ, பாடசாலையிலோ, ஆசிரியர்களிடம்கூட பரீட்சை செய்து பாருங்கள். அநேகர் இதில் தவவார்கள். சிறகு இல்லாமலும் செட்டை இருக்கலாம். பொதுவாக பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து தம் இனத்தைப் பெருக்குகின்றன. ஆனாலும் குட்டி ஈன்று தன் இனத்தைப் பெருக்குகின்ற ஒரு பறவை நம் நாட்களிலும் இன்றும் உண்டு. அது எந்தப் பறவை? அதுவும் வௌவால்தான். இவை கூடுகட்டி குட்டி ஈனும்.
  1. அன்னம்
  2. ஆந்தை
  3. ஈமுக் கோழி
  4. கருடன்
  5. காடை
  6. ஜப்பான் காடை
  7. கவுதாரி
  8. கழுகு
  9. காகம்
  10. குயில்
  11. கோழி
  12. கொக்கு
  13. சிட்டுக் குருவி
  14. தூக்கணாங்குருவி
  15. மயில்
  16. நாரை
  17. நெருப்புக் கோழி
  18. பச்சைக் கிளி
  19. பஞ்ச வண்ணக் கிளி
  20. புல் புல் பறவை
  21. புறா
  22. மரங்கொத்தி
  23. மீன் கொத்தி
  24. மைனா
  25. வாத்து
  26. வான்கோழி
  27. அன்றில்
  28. வௌவால்

Tuesday, 3 January 2017

பறவைக‌ள் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்

பறவைக‌ள் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்

நா‌ம் பா‌ர்‌த்து பொறாமை‌ப்படு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை ‌இன‌ம்தா‌ன் முத‌லி‌ல் இரு‌க்கு‌ம். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெய‌ர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இ‌ங்கே காணலா‌ம்.

பொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வளைய‌த்தை மா‌ட்டி‌வி‌ட்டு, அத‌ன் மூல‌ம் பறவை‌யின‌‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌விய‌ல் முறை, நடமா‌ட்ட‌ம், ஆயு‌ள், இன‌விரு‌த்‌தி போ‌ன்றவ‌ற்றை ஆ‌ய்வு செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

கா‌ல்க‌ளி‌ன் அளவு‌க்கு ஏ‌ற்ப ‌சி‌றிய மெ‌ட்டி போ‌ன்று இ‌ந்த வளைய‌ம் அமையு‌ம். இ‌‌ந்த வளைய‌த்‌தி‌ல் ‌சில கு‌றி‌யீ‌ட்டு தகவ‌ல்க‌ள் இரு‌க்கு‌ம். இ‌துபோ‌ன்று வளைய‌‌மி‌ட்ட பறவையை‌ப் பா‌ர்‌க்கு‌ம் பறவை ஆ‌ர்வல‌ர்க‌ள், இ‌ந்த வளைய‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கு‌‌றி‌யீ‌ட்டை‌க் கொ‌ண்டு, வளைய‌த்தை மா‌ட்டியவ‌ர்களை தொட‌ர்‌பு கொ‌ண்டு பேசு‌ம் போது பறவை த‌ற்போது, எ‌‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள இய‌ல்‌கிறது.

இ‌னி பறவைகளை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்... 

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். 

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். 

பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். 

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும். 

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். 

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது. 

ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன. 
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.

வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

பறவைக‌‌ளி‌ன் மன தை‌ரிய‌த்தை கு‌றி‌ப்‌பிட‌ம் ‌திரை‌ப்பட பாட‌ல் ஒ‌ன்று உ‌ள்ளது. ச‌த்த‌ம் போடாதே எ‌ன்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் வரு‌ம் பாட‌லி‌ன் ஒரு ‌சில வ‌ரிக‌ள்.

கட‌ல் தா‌ண்டு‌ம் பறவை‌க்கெ‌ல்லா‌ம்
இளை‌ப்பாற மர‌ங்க‌ள் இ‌ல்லை.
கல‌ங்காமலே க‌ண்ட‌ம் தா‌ண்டுமே.. இதை ‌நினை‌த்து‌த்தா‌ன் நா‌ம் நம‌க்கு வரு‌ம் சோதனைகளை சாதனைகளாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்