விவசாயம்
நன்மை செய்யும் பூச்சிகள்
மற்றும் பறவைகள
இயற்கை வழ வேளாண்மை வழி முறைகளில் முக்கியமானது பூச்சிகள் கட்டுப்பாடுஇதற்கு தற்போது பூச்சிவிரட்டி (மூலிகைகள்) தயாரிப்பு மற்றும் உயிரியல் பூச்சிகட்டுப்பாடுமுறைகள் அறியப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. இயல்பாகவே பூச்சி இனங்களில் ஒரு இனத்தை மற்றொரு இனம் சாப்பிடுவது இயல்பானது.அவ்வாறு விபரங்களை அறியும் போது நாம் அறிபவை பாம்புகள், தவளை, ஓணான், அரணை,சிலந்திகள், நட்டுவாக்கிளி எனப்படும் பூரான், பொறி வண்டுகள், குளவி இனங்கள், தயிர்கடாய்பூச்சிகள், தேள், ஒரு சில பறவை இனங்கள் இவைகளை குறிப்பிடலாம். மேலும் இதுபோன்ற வழிமுறைகள் அதிகமாகவே உள்ளன. இவற்றை நமது பயிர் வகைகளுக்கு ஏற்றவாறு அறிந்து செயல்படுதல் மிகவும் நல்லது.
இதற்கு இவ்வாறு இடயற்கை வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பண்ணைகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுதல் மிகவும் அவசியம்.இவற்றை தவிர்த்து இரசாயண வழிமுறைகளை கடைபிடிக்ம் போது அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அறிதல் மிகவும் அவசியம்.இந்த பகுதியில் சில புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் ஒரு துவக்கம் மட்டுமே.
மேலும் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம்பறவைகளை கவர்வதற்கு “T” வடிவ கட்டைகளை வயல் வெளிகளில் பயிரின் உயரத்திற்கு ஏற்றவாறுபயிருக்கு மேல் 2 அடி உயரம் உள்ளவாறு அமைத்ததல் பறவைகள் அமர்ந்து பூச்சி, புழுக்கள் உள்ள இடத்தை அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.குளவி இனங்கள் குடி இருப்பதற்கு சட்டிகளை கவிழ்த்து குச்சிகளில் மாட்டி வயல்களில் நடுவே வைத்தல்.சிலந்தி வகைகள் தங்குவதற்கு வைக்கோல் நிரப்பிய பொம்மைகளை நிறுத்திவைத்தல்.தவளை, பல்லிகள், அரணை, ஓணான்கள் போன்றவை தங்குவதற்கு வயல் ஓரங்களில் கற்களால் மறைவிடங்கள் ஏற்படுத்துதல்.பொரி வண்டுகள், பூரான் வகைகள் போன்றவை வாழ்வதற்காக பண்ணையின் குறிப்பிட்ட பகுதிகளில் சறுககளை பரப்பிவிட்டு மூடாக்கு இடுதல், புதர் செடிகளை வளர்த்து வைத்தல்போன்றவை உயிர்வேலி அமைத்தலும் இதில் அடங்கும்
No comments:
Post a Comment