Sunday, 12 March 2017

தமிழகத்தில் நிலத்தடி நீரை கபளீகரம் செய்யும் சீமைக் கருவேல மரங்கள்

தமிழகத்தில் நிலத்தடி நீரை கபளீகரம் செய்யும் சீமைக் கருவேலமரங்கள்

திருநெல்வேலி:விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நிலத்தடி நீரை உறிஞ்சி நாசம் செய்யும் சீமைக்கருவேல் மரங்களை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக கிராமங்களின் நிழல் தரும் சின்னமாக ஒரு காலத்தில் கருவேலமரங்கள் இருந்தன. கருவேலமரத்தை போன்றே வெளிநாட்டில் இருந்து வந்த முட்செடிகளை "சீமைக் கருவேலம்' ஆனது. 1950களில் காங்கிரஸ் ஆட்சியின் போது விறகுக்காகவும், விளைநிலத்தைச்சுற்றி வேலியாகவும் அமையும் என்ற நோக்கில் விதைகள் தூவி பரப்பப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் இன்றைக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் இருப்பையே காலிசெய்யும் எமனாகிவிட்டது. வேலிக்காத்தான் என அறியப்படும் இந்த முட்செடியின் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா.தென்அமெரிக்கா, மெக்சிகோ, கரிபியன் தீவுகளை சேர்ந்தவை. தற்போது ஆசிய, ஆஸ்திரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் ஆக்கிரமிப்பாகிவிட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. ஆழ வேராகவும், உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டிருப்பதால் மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடுக்கிறது. 

No comments:

Post a Comment