முற்காலச் சேரர்கள்.கடைச்சங்க காலச் சேரர்கள்.
முற்காலச் சேரர்கள்.
1. சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
கி.மு 1200 கடைச்சங்க காலச் சேரர்கள்.
1. உதியஞ்சேரலாதன். கி.பி. 45-70.2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். கி.பி. 71-129.3. பல்யானைச் செல்கெழுகுட்டுவன். கி.பி. 80-105.4. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். கி.பி. 106-130.5. செங்குட்டுவன். கி.பி. 129-184.6. அந்துவஞ்சேரல் இரும்பொறை. (காலம் தெரியவில்லை)7. செல்வக்கடுங்கோவாழியாதன் இரும்பொறை. கி.பி. 123-148.8. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். கி.பி. 130-167.9. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கி.பி. 148-165.10. இளஞ்சேரல் இரும்பொறை. கி.பி. 165-180.11. குட்டுவன் கோதை. கி.பி. 184-194.12. மாரிவெண்கோ. காலம் தெரியவில்லை.13. சேரமான் வஞ்சன். காலம் தெரியவில்லை.14. மருதம் பாடிய இளங்கடுங்கோ. காலம் தெரியவில்லை.15. சேரமான் கணைக்கால் இரும்பொறை. காலம் தெரியவில்லை.16. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. காலம் தெரியவில்லை.
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
எல்லைகள்.
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
நகரங்கள்.
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.
சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்.
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றா
No comments:
Post a Comment